அனைத்து விடுமுறைகளும் இரத்து!

Wednesday, June 15th, 2016

அனைத்து தபால் பணியாளர்களினது விடுமுறைகளும் இரத்து செய்யப்படுவதாக தபால்மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து தபால் திணைக்கள பணியாளர்கள் பணி பகிஸ்கரிப்பொன்றை கடந்த 12ஆம் திகதி முதல் முன்னெடுத்து வருகின்றனர்

மேலும் இவர்களின் விடுமுறைகள் இரத்து தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றரிக்கைக்கு அமைவாக அனைத்து பணியாளர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது குறித்து தெரிவித்த தபால்மா அதிபர் பணியாளர்கள் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பு தொடர்பில் இன்றைய தினம் தபாற் தொழிற்சங்கத்துடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பிராந்தியங்களே இல்லாத நாட்டில் ஒருமித்தநாடு என்ற சொல் எதற்கு - இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலை...
கொரோனாவால் மரணிக்கும் பெரும்பாலானோருக்கு தொற்று இருப்பதே தெரியாது - அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் த...
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பொலிஸாரின் கடமையே தவிர இராணுவத்தின் கடமை அல்ல – இராணுவ தளபதி ஷவேந்திர சில...