அனுமதிப்பத்திரம் இன்றிக் கடலட்டைகளைப் பிடித்த  மீனவர்களுக்கு 75 ஆயிரம் ரூபா அபராதம்!

Friday, July 22nd, 2016

யாழ்ப்பாணம் மண்டைதீவிற்கு அண்மித்த கடற்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றிக் கடலட்டைகளைப் பிடித்த 15 மீனவர்கள் கடற்படையினரால் கடந்த  செவ்வாய்க்கிழமை (19) கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவானால் 75 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்றுப் புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது  சந்தேக நபர்களுக்குத்  தலா 5,000 ரூபா வீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. அத்துடன் கைப்பற்றப்பட்ட கடலட்டைகளை அழிக்குமாறும் உத்தரவிட்டார்.

இதேவேளை மீனவர்களிள் வள்ளம் ஒன்றும், மீன்பிடி உபகரணங்களும் குறித்த நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: