அக்கரைப்பற்று விபத்தில் இருவர் பலி!   

Tuesday, April 18th, 2017

இலங்கை போக்­கு­வ­ரத்து சபையின் அக்­க­ரைப்­பற்று சாலைக்கு அரு­கா­மை யில் நேற்று இடம்­பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி­யா­கி­யுள்­ள­தாக அக்­க­ரைப்­பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒலுவில் பிர­தே­சத்­தினைச் சேர்ந்த 43 வய­து­டைய கண்ணன் அப்துல் சலாம் என்­ப­வரும் 24 வய­து­டைய அக்கீப் அப்துல் றசீஸ் என்­ப­வ­ருமே விபத்தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளாவர். பொத்­துவில் பிர­தே­சத்­தி­லி­ருந்து தமது வதி­வி­ட­மான ஒலுவில் பிர­தே­சத்­தினை நோக்கி  வேக­மாக மோட்டார் சைக்­கிளைச் செலுத்தி வந்த வேளையில் பிர­தான வீதியின் வளைவில் கட்­டுப்­பாட்­டினை இழந்த நிலையில் எதிரே இருந்த மதிற் சுவரில் மோதுண்­ட­தா­லேயே  விபத்து இடம்­பெற்­றுள்­ளது. சம்­ப­வத்­தின்­போது  மோட்டார் சைக்­கி­ளினை  செலுத்தி வந்த கண்ணன் அப்துல் சலாம் என்­பவர் சம்­பவ இடத்தில் உயி­ரி­ழந்­த­துடன்  சைக்­கிளின் பின் இருக்­கையில் அமர்ந்து வந்த அக்கீப் அப்துல் றசீஸ் என்­பவர் அக்­க­ரைப்­பற்று ஆதார வைத்­தி­ய­சா­லையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிசிச்சை பெற்று வந்த வேளையில் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்ளார்.

விபத்துச் சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: