விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது – எச்சரிக்கை விடுக்கும் அமைச்சர் விமல் வீரவங்சவின் கட்சி!

Monday, October 5th, 2020

20 ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்படவில்லையெனில் அதனால் ஏற்படும் அரசியல் விளைவுகளுக்கு தாம் பொறுப்பேற்கமுடியாது என்று அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் 20 ஆவது திருத்தத்தில் செய்யப்படவேண்டிய மாற்றங்கள் தொடர்பில் அந்தக்கட்சி மூன்று யோசனைகளை பிரதமருக்கு அனுப்பியுள்ளது.

பிரதமரால் அமைக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தத்தை ஆய்வு செய்வதற்கான குழுவின் ஊடாக இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே 20 ஆவது திருத்தம் தொடர்பில் மாற்றங்கள் எனக்கூறி சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மாற்றங்களில் தமது இந்த மூன்று யோசனைகளும் உள்ளடக்கப்படவில்லை என்றும் விமல் வீரவன்சவின் கட்சி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: