கடமையை பொறுப்பேற்றார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச : டக்ளஸ் எம்.பி நேரில் வாழ்த்து!

Tuesday, November 19th, 2019

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்ததுடன் ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின்னர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அலுவலகத்துக்கு சென்றார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்ததடன் புதிய ஜனாதிபதிக்கு தமது வாழ்த்தக்களையும் தெரிவித்துள்ளனர்.

Related posts:


19 இன் பலவீனங்களே சிறந்த நிர்வாகத் திறன் கொண்ட இன்றைய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு மக்களைத் தூண்ட...
யாழ். பல்கலை மாணவர்களின் எதிர்பார்ப்பிற்கு சாதகமான தீர்வு - வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அமைச்சர் டக...
கடல்சார் அனர்த்த முகாமைத்துவ நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!