வெடுக்குநாரி ஆதி சிவன் கோயிலுக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு!

Wednesday, February 15th, 2023


வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஏற்படுத்தப்படும் இடையூறுகளை இல்லாமல் செய்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தொல்லியல் திணைக்களம், வனவளப் பாதுகாப்பு திணைக்களம் போன்ற திணைக்களங்களினால்    நெடுங்கேணி, வெடுக்குநாரி ஆதி சிவன் கோயில் ஆலய வழிபாடுகளை  மேற்கொள்வதற்கு ஏற்படுத்தப்படும்  இடையூறு அகற்றித் தருமாறு பிரதேச மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த ஆலயத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை இன்று மேற்கொண்டு நிலமைகளை ஆராய்ந்ததுடன் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடனும் கலந்துரையாடினார். இதன்போது, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் கலந்து கொண்டிருந்தார்.  14.02.2023

Related posts: