யாழ். பல்கலை இந்து பீடத்திற்கு மாணவர்களை உள்ளீர்க்க தீர்மானம்!
Thursday, November 17th, 2022
யாழ்.பல்கலைக் கழகத்தின் இந்து பீடத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டு வருடந்தோறும் சுமார் 100 மாணவர்களை உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் துறைசார் அமைச்சர் சுசில் பிறேம்ஜெயந்தவிற்கும் இடையில் கடந்த(14.11.2022) அமைச்சரவை கூட்டத்தினை தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, பல்கலைக் கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து நாகரீகம், சமஸ்கிரதம் மற்றும் சைவ சித்தாந்தம் ஆகிய கற்கைநெறிகளைக் கொண்ட தனித்துவமான பீடமாக, கடந்த 2019 ஆம் ஆண்டு இந்து பீடம் உருவாக்கப்பட்ட போதிலும், தேவையான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாத நிலையிலேயே தற்போது குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- 17.11.2022
Related posts:
போராட்டத்துக்கு ஆதரவு தர மறுத்தவர்கள் தமிழின விரோதிகளே - யாழ் பல்கலை மாணவர்கள்!
நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான இணைந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது. - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...
அதிகாரிகளுக்கு பிரச்சினைகள் இருப்பின் என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுமே தவிர, ஆரம்பிக்கப்பட்ட வேலைத் த...
|
|