வவுனியா தினச் சந்தை செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க உதவுங்கள் – அமைச்சர் டக்ளஸிடம் வியாபாரிகள் கோரிக்கை!

Sunday, January 31st, 2021


……………….
வவுனியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, வவுனியா நகரத்தில் அமைந்துள்ள தினச் சந்தை வியாபாரிகள் சந்தித்து கலந்துரையாடினர்.
கொறோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சந்தை செயற்பாடுகள் தொடர்ந்தும் நிறுத்தப்பட்டுள்ளமையினால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த சந்தை வியாபாரிகள், வடக்கு மாகாணத்தில் ஏனைய பெரும்பாலான சந்தைகள் மீண்டும் செயற்பட அனுமதிக்கப்பட்ட நிலையிலும் தமக்கு அனுமதி வழங்கப்படாமை ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், தேவையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சந்தை செயற்பாடுகளை முடியுமான விரைவில மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும், வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை ஆரம்பித்து வைப்பது தொடர்பாகவும் இச்சந்தர்ப்பத்தில் கடற்றொழில் அமைச்சர் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கலைஞரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் - டக்ளஸ் எம்.பி. அஞ்ச...
தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். – அமைச்சர் டக்...
மீன் ஏற்றுமதி வருமானம் முறையாக நாட்டிற்கு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவான...

டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு கைமேல் பலன் - இ.போ.ச. ஊழியர்கள் போராட்டம் நிறைவுக்கு வந்தது!
தனியார் பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடும் பணியாளர்களது நலன்கள் கவனத்தில்; கொள்ளப்பட வேண்டும் - நாடாளும...
கிழக்கிற்கான ஜனாதிபதி செயலணியில் சிறுபான்மையினரை இணைத்துக் கொள்ள இணக்கம்: அமைச்சர் டக்ளஸின் முயற்சிக...