வளங்கப்படும் சலுகைகளை மக்கள் அனுபவிக்க வழிவகை செய்வது அவசியமாகும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
Saturday, November 19th, 2016
வரவுள்ள புதிய ஆண்டுக்கென சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தைப் எமது மக்களின் நலன்களில் இருந்து பார்க்கும்போது அது அதிகளவில் எமது மக்களுக்கு மகிழ்ச்சியினை தரமுடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது என்பதை நான் இங்கு தெரிவித்தாக வேண்டிய நிலையில் உள்ளேன்.
2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதை நாம் வரவேற்கின்றோம். ஆனால் கடந்த காலங்களிலும் அரசு சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்ததுள்ளதாக கூறிய நிலையிலும், அவ்வாறு குறைக்கப்பட்ட விலைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய இயலாத நிலை எமது மக்களுக்கும் குறைக்கப்பட்ட விலைகளில் பொருட்களை விற்பனை செய்ய முடியாத நிலை வர்த்தகர்களுக்கும் ஏற்பட்டிருந்தது என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
எனவே இவ்வாறு விலை குறைக்கப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்கள் குறைக்கப்பட்ட விலைகளுக்கு விற்கப்படுகின்றனவா என்பது குறித்து உறுதிப்படுத்த வேண்டியுள்ளது துறைசார்ந்தவர்களது கடப்பாடாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|