வர்த்தகர்களிடம் விவசாயிகள் சிக்கிக் கொள்வதற்கு நெல் கொள்வனவிலுள்ள முறைகேடுகளே காரணம் – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Friday, February 8th, 2019

நெல் சந்தைப்படுத்தல் சபையானது உரிய காலபோகங்களில் நெல் கொள்வனவிற்கு ஏதுவான ஏற்பாடுகளை மேற்கொள்ளாததன் காரணமாக விவசாய மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உட்படுவதுடன், தங்களது உற்பத்திகளை குறைந்த விலையில் தனியாருக்கு விற்கவேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகின்றனர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தோடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இத்தகைய நிலையை மிக அதிகமாக வடக்கு மாகாணத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. நெல்லினைப் பெற்று மதுபான உற்பத்தி சாலைகளுக்கு கடந்த காலங்களில் வழங்கியிருந்த இச் சபையின் செயற்பாடுகள் காரணமாகவே இந்த நாட்டில் அரசிக்கான தட்டுப்பாடுகளையும் கடந்த காலத்தில் எமது மக்கள் எதிர்கொண்டிருந்தனர்.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் சேவைகள் எவை எனப் பார்த்தால், தானியங்களை கொள்வனவு செய்தல், விற்றல், விநியோகித்தல் பகிர்ந்தளித்தல் என்றெல்லாம் கூறப்படுகின்றது. இந்தச் சபையானது இந்த நாட்டு விவசாய மக்களுக்கு இந்தச் சேவைகளை எல்லாம் செய்து வருகின்றதா? என்ற கேள்வி பொதுவாகவே எமது மக்கள் மத்தியில் எழுகின்றது.

இத்தகைய சேவைகளை இந்தச் சபை ஒழுங்குற நிறைவேற்றியிருந்தால், நெற் சேதங்கள் ஏற்பட்டிருக்காது, விவசாய மக்கள் போதியளவில் பயன் பெற்றிருப்பார்கள. எனவே, இந்த நாட்டு மக்களது பணத்தினை கொண்டு, செயற்படுத்தப்படுகின்ற இத்தகைய அரச நிறுவனங்கள் தொழில் நியமனங்களை வழங்குவதற்கும், ஊழல், மோசடிகள், முறைகேடுகளை செய்வதற்கும்தான் இருக்கின்ற எனில், அவற்றால் எமது மக்களுக்கு சுமையே தவிர, நன்மைகள் இல்லை என்றால், இத்தகைய நிறுவனங்கள் தேவையற்றவை என்ற நிலைப்பாட்டிற்கே வர வேண்டியுள்ளது.

Related posts:


வடக்கில் 14 தபாலகங்கள் தனியார் கட்டிடங்களிலேயே இயங்குகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டி...
மக்கள் அரசியல் பலத்தை எமக்கு வழங்கியிருந்தால் அவர்கள் எதிர்நோக்கிவரும் கணிசமான பிரச்சினைகளுக்கு தீர...
கிளிநொச்சி சர்வதேச விளையாட்டரங்கை சீர்ப்படுத்த நாமல் ராஜபக்ஷ நடவடிக்கை! அமைச்சர் டக்ளசின் முயற்சியால...