வடமாராட்சி கடல் நீரேரியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இன்னுமொரு திட்டம் ஆரம்பம்!

Friday, October 23rd, 2020

வடமாராட்சி கடல் நீரேரியில் நன்னீர் மீன் வளர்ப்பை விருத்தி திட்டத்தின் அடிப்படையில் சுமார் 40,000 மீன் குஞ்சுகள் இன்று(23.10.2020) வைப்பிலப்பட்டுள்ளன.

அம்பன், குடத்தனை பொது மண்டபத்தில் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், முதற் கட்டமாக 1 இலட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகளை விடுவதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில், மீதி மீன் குஞ்சுகள் எதிர்வரும் நாட்களில் வைப்பிலிடப்படவுள்ளது.

நாடளாவிய ரீதியில் நீர் வேளாண்மையை விருத்தி செய்யும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்திற்கு அமைய, குறித்த பகுதியில் நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்வதன் ஊடாக எதிர்காலங்களில் பருவ கால மாற்றம் காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்வதார சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில் குறித்த திட்டம் நடைமுறைப்படுப்பட்டுள்ளது.

களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள குறித்த திட்டத்தினை நக்டா எனப்படும் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபை நடைமுறைப்படுத்தவுள்ள நிலையில், குறித்த திட்டத்தின் மூலம் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கில் மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களை மீட்கத் தொடர்ந்தும் போராடி வருகின்றனர் – நாடாளுமன்றில் ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்களுடன் விசேட கலந்துரையாடல்!
அமரர் சிவஞானசோதியின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி செயலமர்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு...

வடக்கின் அபிவிருத்தி அமைச்சு என்பது மக்களின் உணர்வுகளுடன் ஒன்றிணைந்தது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...
ஜனாதிபதி ரணிலின் தீர்மானம் நல்லெண்ண சமிக்கையாக பயன்படுத்தப்பட வேண்டும் - புலம்பெயர் உறவுகளிடம் அமைச்...
இ.போ.ச - தனியார் இணைந்த நீண்ட தூர பேருந்து சேவை விவகாரம் - பரீட்சார்த்த அடிப்படையில் சேவைகளை நடத்தும...