வடக்கின் கடற்றொழிலுக்கு விசேட நிதி – சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்துவோம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, November 18th, 2023

வடக்கின் கடற்றொழிலை மேலும் விருத்தி செய்கின்ற வகையில், வடக்கின் கடற்றொழில் தொடர்பிலான வசதிகளை மேற்கொள்வதற்கென 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நீர் வேளாண்மைக்கனெ 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இந்த நிதியனைக் கொண்டு நாம் வடக்கின் கடற்றொழில் துறையினை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும், அதன் முகாமைத்துவத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கும் தேவையான திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உணவுப் பாதுகாப்பு, போசாக்கு உணவினை மேம்படுத்துவதற்கு, நன்னீர் வேளாண்மையினை அனைத்து நீர் நிலைகளையும் பயன்படுத்தி மேற்கொள்வதற்கும் தயாராக உள்ளோம். இவ்விடயங்கள் தொடர்பிலான விரிவான விளக்கங்களை கடற்றொழில் அமைச்சு தொடர்பிலான விவாத உரையின்போது தரலாம் என நினைக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts:

ஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்து சபை சாலையின் உப அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் - மன்றில் டக்ளஸ் M...
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் புதிய சிற்ப தேரின் வெள்ளோட்டம் இன்று: டக்ளஸ் எம்.பி. கலந்து சிறப்ப...
காவலூர் - காரைநகர் - ஒழுங்குபடுத்தப்பட்ட படகுச் சேவை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும் - அமைச்சர்...

தேர்தல்கால பெறுபேறுகளை கொண்டு மக்களது அபிலாஷைகளை புறந்தள்ளப் போவதில்லை -  வவுனியாவில் டக்ளஸ் எம்.பி ...
அரசாங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்ட மண்ணெண்ணை அமைச்சர் டக்ளஸ் - இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் ஆகி...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தம் - பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 3070 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்...