யாழ் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டறவு சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு!
 Saturday, November 10th, 2018
        
                    Saturday, November 10th, 2018
            யாழ் மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டறவு சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்றையதினம் வருகைதந்திருந்த குறித்த பிரதிநிதிகள் தமது கூட்டுறவு சங்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
குறிப்பாக பனம் தொழில்துறை சார்ந்தவர்கள் தற்போது பல்வேறுபட்ட நெருக்கடிகளுடனும் இடர்பாடுகளுடனும் வாழ்ந்து வருவதாகவும் இதுவிடயம் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது அவர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
குறிப்பாக திக்கம் வடிசாலை மீள் புனரமைப்பு, பனம் கைப்பணித் தொழில்துறையை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
யாழ் பல்கலை முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்கள் சுற்றறிக்கையின் பிரகாரமா நிரப்பப்படுகின்றன.– நாடாளுமன...
நீதி தேவதையின் கண்கள்தான் கட்டப்பட்டுள்ளனவே தவிர நீதியை நிலைநாட்டுபவர்களது கண்கள் கட்டப்படவில்லை – ...
|  | 
 | 
கிளிநொச்சியில் எரிந்து கருகிக்கிடப்பது எங்கள் முயற்சியும், எங்கள் உழைப்பும்- டக்ளஸ் தேவானந்தா!
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை நோக்கியதாகவே எமது பயணங்கள் தொடரும் - வவுனிய...
வட்டுக்கோட்டையில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல் சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பி க்கும் எந்தத் ...
 
            
        


 
         
         
         
        