யாழ்.மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதி பிரதமரால் திறந்துவைப்பு!

Saturday, September 17th, 2016

யாழ் மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்

மாவட்டச் செயலக வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தொகுதியையே பிரதமர் இன்றையதினம் (17) உத்தியோகபூர்வமாக திறந்துவைத்து பாவனைக்காக கையளித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன மற்றும் பிரதி அமைச்சர் அன்டனி நிமல் லான்சா வர்ணகுலசூரிய ஆகியோரின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று யாழ்மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதியை திறந்துவைத்தார்.

இந்நிழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு  நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1

2

3

6

16

DSCF1419

14

15

Related posts:


இலங்கைத் தமிழரது வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நியமனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் – செயலாளர் நாயகம் டக...
தமிழ் மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றவே ஓய்வின்றி உழைக்கின்றோம் - தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அ...