யாழ் மாநகர் வட்டாரக் கட்டமைப்பின் வலுவாக்கல் குறித்து டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Sunday, March 8th, 2026


…….
யாழ் மாநகர வட்டாரக் கட்டமைப்பின் வலுவாக்கல் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் இன்று (08) மாலை கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

யாழ் மாநகரசபையை உள்ளடக்கிய வட்டாரங்களின் நிர்வாக கட்டமைப்பினர் செயற்பாட்டாளர்கள், முக்கியஸ்தர்களுடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் போது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, வட்டார கட்டமைப்பின் சமகாலச் செயற்பாடுகள் மற்றும் வலுவாக்கலின் அவசியம் குறித்து வலியுறுத்தியதுடன் அதற்கான ஆரோக்கியமான கருத்துக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: