யாழ்ப்பாணம் நெடுந்தூர தனியார் பேருந்து நிலையத்தை திறந்துவைத்து சேவைகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 27th, 2021

யாழ்ப்பாணம் முனீஸ்வரன் வீதியில்  அமைக்கப்படுள்ள நெடுந்தூர தனியார் பேருந்து நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் இன்றையதினம் (27) மக்கள் பாவனைக்காக அதிகாரபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களிற்கு செல்லும் தனியார் பேருந்துகள் தரித்து நிற்பதற்கு உரிய இடம் இல்லாமல் இருந்துவந்த நிலையில் அதனை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே இன்றையதினம் குறித்த நெடுந்தூர தனியார் பேருந்து நிலையத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்துவைத்து சேவைகளை ஆரம்பித்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக பல வருடங்களாக யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதியின் வைத்தியசாலை பின் பகுதியிலேயே வெளிமாவட்டங்களிற்கான தனியார் பேருந்துகள் தரித்திருந்து தமது சேவைகளை முன்னெடுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழர்களை ஆபத்து வேளையில் கைவிட்ட சர்வதேசம் அரசியல் தீர்வை ஒருபோதும் கொண்டுவராது - அமைச்சர் டக்ளஸ் ...
இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே நல்லெண்ணம் குறித்...
சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அம...

“எழுக தமிழ்” பேரணியில் கலந்துகொள்ள முடிவுசெய்தது ஏன்? “எழுக தமிழ்” கூட்டுப்பேரணியாக அணிதிரண்டது ஏன்...
மகிழ்ச்சிப் பெரு வாழ்வின் நம்பிக்கையோடு தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம்! - அமைச்சர் டக்ளஸ் தேவானந்த...
தொடரும் சீரற்ற காலநிலை - கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் விழிப்புணர்வுகளை தொடர்ச்சியாக முன்னெ...