இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே நல்லெண்ணம் குறித்த தொலைபேசி உரையாடல்!

Friday, May 15th, 2020

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இடையே  இரு நாடுகளுக்கிடையிலான நல்லெண்ணம் குறித்து தொலைபேசியில் உரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த உரையாடல் இன்றையதினம் நடைபெற்றது.

குறித்த உரையாடலின்போது  சமகால அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதுடன் எம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பில் இந்தியாவின் நல்லெண்ணம் மேலும் வலுப்பெறும் என்றும் புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவரோடு இணைந்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தேவையான இந்திய உதவிகளை பெற்றுக்கொள்வதில் கூடுதல் முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை தூதுவர் கோபால் பால்கே அவர்களின் கருத்து ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதே நேரம் இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவராக பொறுப்பேற்றிருக்கும் கோபால் பால்கே அவர்களை தமிழ் மக்கள் சார்பில் வரவேற்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யுத்தத்தால் இந்தியா சென்று மீளவும் இலங்கை திரும்பும் அகதிகளின் வாழ்வியல் நிலை தொடர்பில் ஏதேனும் ஏற்ப...
செலவுகளுக்கு ஏற்ப மக்களுக்கு பயன்களும் கிடைக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள யாழ். ஸ்ர...