யாழ்ப்பாணத்தில் படகு கட்டும் தொழிற்சாலையை அமைதற்கு தனியார் முதலீட்டாளர்கள் கோரிக்கை – ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, December 5th, 2021

நீர்கொழும்பு, துங்கல்பிட்டியவில் தனியார் முதலீட்டாளர்களினால் செயற்படுத்தப்பட்டு வரும் படகு கட்டும் தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ்ப்பாணத்திலும் படகு கட்டும் தொழிற்சாலையை அமைதற்கான விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் முதலீட்டாளர்களினால் வெளிப்படுத்தப்பட்ட ஆர்வத்தினை வரவேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

நோர்வே முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் செயற்படுத்தப்பட்டு வருகின்ற குறித்த படகு கட்டும் தொழிற்சாலைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்த கடற்றொழில் அமைச்சர், தொழிற்சாலையின் உற்பத்திகளை மேலும் விஸ்தரிப்பது தொடர்பாகவும், எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்ததுடன், இம்மாத இறுதியில் விரிவான கலந்துரையாடலை நடத்தி அனைத்து விடயங்களும் ஆராயப்படும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தேசமெங்கும் நிரந்தர ஒளிவீச தீபச்சுடர்கள் ஏற்றுவோம்! - தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா...
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின மீன் விற்பனை நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சம்பி...
ஜனாதிபதி ரணிலின் வடக்குக்கான வருகை வெற்றியடைந்துள்ளது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் – அமைச்சர் டக்ள...
கடற்றொழில்சார் ஏற்றுமதியாளர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உற...
உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் - காலம் சரியானவற்றை நிரூபித்து வருகின்றது - அமைச்...