முல்லைத்தீவு மாவட்டத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
Saturday, February 16th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயம் ஒன்றை இன்றையதினம்(16) மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் வட்டாரக்குழு உறுப்பினர்களுடனான சந்திப்பொன்றை பாரதிதாசன் சனசமூக நிலையத்தில் மேற்கொண்டார்.
அத்துடன் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்லும் அவர் அங்குள்ள மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராயாவுள்ளதுடன்
கட்சியின் குறித்த மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு சமகால அரசியல் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதி பிரதமரால் திறந்துவைப்பு!
பருத்தித்துறை நரசிம்மர் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கியை டக்ளஸ் தேவானந்தா மக்களிடம்...
டக்ளஸ் தேவானந்தா மீண்டும் கடற்றொழில் அமைச்சராக நியமனம்.
|
|
|







