டக்ளஸ் தேவானந்தா மீண்டும் கடற்றொழில் அமைச்சராக நியமனம்.
Monday, May 23rd, 2022ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையிலான புதிய கட்சி சாரா அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீண்டும் கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இன்று அமைச்சு அலுவலகத்துக்கு வருகை தந்து அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அதிகாரிகளை சந்தித்து, கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்டு இடையில் விடுபட்ட வேலைகளை துரிதமாக முன்னெடுப்பது தொடர்பாகவும், எதிர்காலத்தில் முன்னுரிமைப்படுத்தி முன்னெடுக்க வேண்டிய பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
Related posts:
வறுமையில் வீழ்ந்து கிடக்கும் உங்களது பிரதேசத்தை தூக்கி நிறுத்த அயராது பாடுபடுவேன் - முல்லை மக்களிடம்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாதர் நீர்வள தொழில்சார் ஊக்குவிப்பு திட்ட அங்குரார்ப்பண நிழ்வு ய...
தேசிய நல்லிணக்கமே நிரந்தர தீர்வுவைக் காண்பதற்கு இருக்கும் ஒரே வழி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டி...
|
|