மீன்பிடிப் படகு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நியம ஒழுங்கு முறைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆய்வு!

Tuesday, October 12th, 2021

மீன்பிடிப் படகு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் படகு உற்பத்திச் செயற்பாடுகளின்போது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய  நியமங்கள் மற்றும் ஒழுங்கு முறைகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

கடற்றொழில் அமைச்சின் செயலாளர், படகு உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட இக் கலந்துரையாடலில், படகு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் இடையூறுகளை நீக்குவதற்கு கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: