பலாலி – தமிழக விமான சேயையை மீண்டும் ஆரம்பிக்க ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலய திருப்பணிச் சபை நன்றி தெரிவிப்பு!

Monday, June 20th, 2022

தேவாரப் புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வில் தென்னிந்தியாவில் இருந்து அடியவர்கள் கலந்து கொள்ளும் வகையில் பலாலி –  திருச்சி மற்றும் சென்னை போன்ற விமான நிலையங்களுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தினை மீண்டும் ஆரம்பிதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவித்துள்ள ஆலய திருப்பணிச் சபையினர், கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறும் கடற்றொழில் அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும், ஜீலை 6 ஆம் திகதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள், இம்மாதம் 30 ஆம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளமையினால், குறித்த கிரயைகளில் பங்குபற்றுவதற்காக வருகைதரவுள்ள சிவாச்சாரியர்கள், மற்றும் அடியவர்களின் நலன் கருதி, ஜீன் 28 ஆம் திகதி தொடக்கம் பலாலி விமான சேவையை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் ஆராயுமாறும் திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்

சபையின் தலைவர் திரு. செ. இராகவன், இணைச் செயலாளர் திருமதி அ. கையிலாசபிள்ளை மற்றும் பொருளாளர் திரு வே. கந்தசாமி ஆகியோர் , மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரடியாகச் சந்தித்து கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

முறைகேடுகளுக்கு நாம் ஒருபோதும் இடம் கொடுத்தது கிடையாது – முன்பள்ளி ஆசிரியர் மத்தியில் டக்ளஸ் எம்.பி...
நச்சுக் காற்றை புறந்தள்ளுங்கள் ஆரோக்கியமான காற்றை பெற்றுத் தருகிறேன் - கிளி. மக்களுக்கு அமைச்சர் டக்...
அமைச்சர் பஷிலின் பதவியேற்பு அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது - அமைச்சர் டக்ளஸ் வாழ்த்த...

ஈ.பி.டி.பி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்- பொலிஸ்மா அதிபரி...
நித்திய உறக்கத்தில் ஆழ்ந்தாலும் ஆற்றிய ஆன்மீகப் பணிகள் எம்முடன் வாழும் - அருட்கலாநிதி ஜோசப் குணாளின்...
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் - கடற்றொழில் அமைச்சர் சந்திப்பு - சர்வதேச மீன்பிடி தொடர்பில் முக்கிய கலந்த...