மில்டன் மோட்டர்ஸ் முச்சக்கர வண்டி தொழிற்சாலைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரமேஸ் பத்திரன விஜயம் – நிலைமைகள் தெர்ர்பிலும் ஆராய்வு!

Monday, December 12th, 2022

பண்டாரகம பகுதியில் தனியார் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள மில்டன் மோட்டர்ஸ் எனப்படும் மின்கலத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன ஆகியோர் பார்வையிட்டனர்.

குறித்த தொழில் முயற்சியாளர்களினாலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய மின்கலத்தில் இயங்குகின்ற படகு இயந்திரங்களை வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

பேலியாகொட மத்திய மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயமொன்றை நேற்றையதினம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சந்தையின் செயற்பாடுகளை ஆராய்ந்ததுடன், அடையாளப்படுத்தப்பட்ட குறைபாடுகளை தீர்ப்பது தொடர்பாகவும் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் ஆராய்ந்தார்.

குறிப்பாக வாகனத் தரிப்பிடங்களை ஒழுங்குபடுத்துதல், கழிவுப் பொருட்களை உரிய முறையில் அகற்றி சுகாதார நிலையை உறுதிப்படுத்தல் மற்றும் நிர்வாக குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவனம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

உள்ளுராட்சித் தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும்  ஐரோப்பியயூனியன் பிரதிநிதிகளிடம் டக்ளஸ் தேவானந்தா...
நீர்கொழும்பு கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு - களப்பு அபிவிருத்தியிலும் அமைச்சர் டக்ளஸ் அவதானம்!
தேசிய கல்விக் கொள்கை சீர்திருத்தத்தின் போது, இலவச அரச கல்விக் கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உற...

பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் மாற்றத்திற்கு போது மக்களின் காணிகள் மேலும் சுவீகரிக்கப்படுமா? - ட...
தோழர் ஜெகனின் தந்தையாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரி...
பயிர்களின் விளைச்சலை மட்டுமல்ல கற்கும் கல்வியின் விளைச்சலையும் சிறப்பாக அறுவடை செய்ய வேண்டும் - மாண...