மாற்றுத்திறனாளிகளுக்கான விஷேட திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 19th, 2016

யுத்தம் காரணமாக அவயங்களை இழந்து மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையும்  பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கையும் வடக்கு – கிழக்கு பகுதிகளில் அதிகமாக உள்ளது. ஆகவே இவர்களுக்கென விஷேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

தற்போது நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற அரச நிவாரணத் திட்டங்களால் இம் மக்களது பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்க முடியாது என்பதையும் நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

012

Related posts:

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்!...
எமது மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்த்து மக்களின் மனங்களை வெற்றி கொள்வதற்கு முன்வாருங்...
தேசிய பாதுகாப்பும் தேசிய நல்லிணக்கமும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் எம்.பி. வலியுறு...