மாங்குளம் வன்னி உணவகம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத் தாருங்கள் – டக்ளஸ் எம்.பியிடம் நிர்வாகத்தினர் கோரிக்கை!
Tuesday, January 1st, 2019வன்னி உணவகத்தின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு பொருளாதார உதவிகளைப் பெற்றுத் தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் மாங்குளம் பெண்கள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய தினம் மாங்குளம் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்த குறித்த உணவகத்தின் நிர்வாகத்தினரே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாங்குளம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்துவரும் இந்த உணவகம் பல்வேறு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிய நிலையில் தனது சேவையை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் அதன் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களை உள்ளீர்க்கும் முகமாகவும் குறித்த உணவகத்தை நவீனப்படுத்துவதற்காக உணவுகள் தயாரிக்கும் இயந்திரங்கள் மற்றும் தளபாடங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் அவர்கள் கோரியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த கோரிக்கையை செவிமடுத்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார் தரப்புடன் தொடர்பு கொண்டு குறித்த உணவகத்தினதும் பெண்கள் அமைப்பினதும் மேம்பாட்டுக்கான பொருளாதார தேவைப்பாடுகளை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|