மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாமைக்கான உண்மையான காரணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
Monday, November 23rd, 2020
…………….
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அக்கறையீனம் காரணமாகவே மாகாண சபைகள் செயலிந்து போயுள்ளன என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் அமைந்துள்ள தற்போதைய அரசாங்கம் நிச்சயமாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் ஆட்சியதிகாரத்தினை ஒப்படைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தல் நடாத்தப்படாமையினால் அனைத்து மகாண சபைகளும் நீண்ட காலமாக ஆளுநர்களினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் மாகாண சபைகளின் ஊடான அதிகாரப் பகிர்வை முழுமையாக அமுல்ப்படுத்துவதனை ஆரம்பமாகக் கொண்டு தமிழ் மக்களின் அபிலாசைகளை நோக்கி நகர முடியும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே குறித்த குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நான் அடிக்கடி சொல்வது, சந்தர்ப்பங்களை உருவாக்கி கொள்வதுடன் உருவாகியிருக்கும் சந்தர்ப்பங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதெல்லாம் கடந்த நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களும் அவர்களுக்கு முட்டுக் கொண்டுத்துக் கொண்டிருந்தவர்களும் செய்திருக்க வேண்டிய வேலை.
அதிகாரங்கள் தேவை என்று கூப்பாடு போடுகின்றவர்கள், கடந்த ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டுடிருந்தபோது நினைத்திருந்தால், நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் ஒன்றை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றி விட்டு பழைய விகிதாரசார தேர்தல் முறையூடாக நடத்தியிருக்க முடியும். ஆனால் அக்கறையின்மையினால் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.
எனினும், இந்த அரசாங்கம் நிச்சியமாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும். அதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை என்று நினைக்கின்றேன்’ என்று தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|