மருத்துவர்களது பிரச்சினைகள் தொடர்பில் அரசு உடனடி தீர்வை எட்ட வேண்டும்!

Thursday, September 14th, 2017
மருத்துவர்களது பணிப் பகிஷ்கரிப்புகள் காரணமாக நோயாளர்கள் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்றமையானது அடிக்கடி தொடர்ந்து இடம்பெறுகின்ற ஆபத்தாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், மருத்துவ சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைள் தொடர்பில் அரசு இழுத்தடிக்கும் போக்குடன் செயற்படாது, அப் பிரச்சினைகளை சுமுகமான முறையில் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த 12ஆம் திகதி வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் 09 மாவட்டங்களில் மருத்துவர்களது பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இந்த நடவடிக்கைகள் ஏனைய மாவட்டங்களில் நேற்றும், இன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. மருத்துவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வின்றேல் மேற்படி பணிப் பகிஷ்கரிப்பானது ஒன்றிணைந்த பணிப் பகிஷ;கரிப்பாக தொடரும் அபாயம் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் மற்றும் ஏனைய ஆளணியினருக்கான பற்றாக்குறைகள் பல வருட காலமாகத் தொடர்கின்ற நிலையில், நோயாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வரும்போது, இத்தகைய பணிப் பகிகரிப்புகள் மேலும் அவர்களை கடுமையான பாதிப்புகளுக்கு உட்படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதே நிலையை நாட்டில் பெரும்பாலான பகுதிகளிலும் காணக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலத்தில் நாட்டில் எரிபொருள்துறை சார்ந்த பணியாளர்களது பணிப் பகிஷ;கரிப்புகள் இடம்பெற்றிருந்த நிலையில், அதனை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர அரசால் முடிந்திருந்தது. ஆனால், தொடரும் மருத்துவர்களது பணிப் பகிஷ;கரிப்புகளை முடிவுக்குக் கொண்டு அரசால் இதுவரையில் இயலாதிருப்பது கேள்விக்குரிய விடயமாகியுள்ளது. இது, மக்களிடையெ பெரும் அதிருப்தி நிலையதை; தோற்றுவித்துள்ளது.
மருத்துவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கென பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வாவின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், அக் குழு தொடர்பில் மருத்துவத் தரப்பினர் அதிருப்திகளை வெளியிட்டு வருகின்ற ஒரு நிலையே காணப்படுகின்றது.
மருத்துவர்களது பிரச்சினைகளுள் பிரதான பிரச்சினையாக காணப்படுகின்ற மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான போராட்டங்களில மருத்துவத்துறை மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்களது கற்கை செயற்பாடுகள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றன. இன்றைய நிலையில் எமது நாட்டில் மருத்துவர்களுக்கு பாரிய பற்றாக்குறைகள் நிலவும் நிலையில், நாளைய மருத்துவர்களாக மாற வேண்டிய இந்த மாணவர்களது கற்கை செயற்பாடுகளும் பாதிக்கப்படுமானால், எமது நாட்டின் எதிர்கால மருத்துவத்துறையானது பாரிய சவாலுக்கு உட்படுத்தப்படுவது நிச்சயமாகும். அதே நேரம் எமது நாட்டில் மருத்துத்துறையில் கற்கைகளை மேற்கொண்டு வருகின்ற வெளிநாட்டு மாணவர்கள் அந்த நாடுகள் திருப்பி அழைக்கின்ற நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய இந்த நெருக்கடியான நிலையை அவதானத்தில் கொண்டு, அரசு உடனடி, நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை எட்ட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: