மன்னார் பனங்கட்டி கொட்டு கிராமிய அமைப்பு பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு!

Sunday, January 5th, 2020

மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மன்னார் பனங்கட்டிகொட்டு கிராமிய அமைப்பு பிரதிநிதிகளை
சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.

மன்னார் மாவட்டத்தின் கடற்றொழிலாளர் அமைப்புக்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஆகியவற்றின் அழைப்பின் பெயரில் குறித்த மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.

குறிப்பாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
தொடர்பாகவும் நன்னீர்
மீன் வளர்ப்பு தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: