மத ரீதியான தூண்டுதல்கள் இன ஐக்கியத்தை சீர்குலைக்கும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவிப்பு!

Sunday, February 23rd, 2020

மத ரீதியான செய்தியொன்றை வலம்புரிப் பத்திரிகை வெளியிட்டதாக கூறி அந்த நிறுவனத்தின் அலுவலகத்தினுள் ஒரு பகுதி மக்கள் புகுந்து போராட்டம் என்ற பெயரில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டிய விதமானது இலங்கை வாழ் இந்து மற்றும் கிறிஸ்வர்களிடையே
இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க சில விசமிகளால் முன்னெடுக்கப்படும் ஒரு செயலாகவே அமைந்திருந்தாகவே கருதப்படுகின்றது.
அந்தவகையில் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் இவ்வாறான செயற்பாடுகள் கண்டிக்கப்பட வேண்டியதுடன் இனிவருங் காலங்களில் இவ்வாறான புரிதலின்றிய செயற்பாடுகள் நடைபெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்துத்தரப்பினரும் செயற்படுவது அவசியமாகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.

Related posts:

சமுர்த்தி நலனுதவி கோரும் குடும்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - டக்ளஸ் ...
வடக்கில் சட்டவிரோத காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த முடியுமா? - ஜன...
வேலணை பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பொ...