மக்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்களுக்கு சரியான தெளிவினை ஏற்படுத்துவதாக கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
Sunday, July 30th, 2023
மக்களுக்கு சரியான வழியைக் காட்டுவதுடன், மக்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்களுக்கு சரியான தெளிவினை ஏற்படுத்துவதாக கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
அத்துடன் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறி மக்களை உசுப்பேற்றி – சூடேற்றி, வாக்குகளை அபகரிக்கும் போலிகளின் செயற்பாடுகள் எல்லா காலங்களிலும் எடுபடாது என்பதை மக்களிடம் எடுத்து கூறும் வகையில் ஈ.பி.டி.பி கட்சியின் செயற்பாடுகள் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நுண்கடன் வழங்கிய நிறுவனங்கள் மீள் செலுத்தும் காலத்தை இயல்புநிலை வரும்வரை ஒத்திவைக்க வேண்டும் - அமை...
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தென் பகுதிக்கு நேரடி விஜயம் - குறைபாடுகளை தீர்த்து வைக்க அதிகாரிகளுக்கு ...
கிளிநொச்சி ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - உற்பத்தி செயற்பாட...
|
|
|


