மக்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்களுக்கு சரியான தெளிவினை ஏற்படுத்துவதாக கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, July 30th, 2023

மக்களுக்கு சரியான வழியைக் காட்டுவதுடன், மக்கள் மத்தியில் காணப்படும் குழப்பங்களுக்கு சரியான தெளிவினை ஏற்படுத்துவதாக கட்சியின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

அத்துடன் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறி மக்களை உசுப்பேற்றி – சூடேற்றி,  வாக்குகளை அபகரிக்கும் போலிகளின் செயற்பாடுகள் எல்லா காலங்களிலும் எடுபடாது என்பதை மக்களிடம் எடுத்து கூறும் வகையில் ஈ.பி.டி.பி கட்சியின் செயற்பாடுகள் இருக்க வேண்டும்  எனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும்  முக்கியஸ்தர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்  போதே இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: