மக்களுக்கு உடனடி வருமானத்தை வழங்கும் உற்பத்திகளுக்கு முன்னுரிமை : வேலணையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 28th, 2022

நாடளாவிய ரீதியில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய  வட்டாரத்திற்கு தலா 4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின்  ஊடான அபிவிருத்தி திட்டங்களுக்கு  உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும்  வேலைத்திட்டங்களையே தெரிவு செய்வதுடன் அதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வேலணை பிரதேச செயலகத்தில் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற  வட்டாரங்களுக்கு தலா 4 மில்லியன் ஒதுக்கீட்டின் மூலம்  வேலணை ஊர்காவற்றுறை, நெடுந்தீவு ஆகிய தீவகப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், மக்களுடைய வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவற்கு பிரதேசங்களின் உட்கட்டமைப்புக்களும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றபோதிலும் தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு வட்டாரங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நிதியை மக்களுக்கு உடனடி வருமானத்தை வழங்கக் கூடிய உற்பத்திசார் அபிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Related posts:


மக்கள் நலனையே சிந்திப்பேன்: மக்கள் நலனையே செய்வேன் -  முல்லைத்தீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவ...
தமிழ் மக்கள் நலன் கருதிய இலக்கானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலத்திலேயே எட்டப்பட வேண்டும் – அமை...
மக்கள் தமது வாக்குகளை வீணை சின்னத்துக்கு வழங்கி ஈ.பி.டி.பியை அரசியல் பலம் மிக்கவர்களாக்க அணிதிரள வேண...