மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியது தேசிய எழுச்சி மாநாட்டு பிரகடனம்!
Sunday, May 8th, 2016ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் பிரகடனம் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஏகோபித்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய எழுச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு இன்றைய தினம் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான சின்னத்துரை தவராசா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டின் பிரகடனம் அவையில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அங்கு கூடியிருந்த மக்கள் தமது கைகளில் ஏந்தியிருந்த கட்சியின் கொடிகளை அசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்து பிரகடனத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர்.
கொள்கைப் பிரகடனத்தை கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் அவையில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
‘சிறைக் கைதிகளும் மனிதர்களே’ - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
முல்லைத்தீவில் கருவாட்டு தொழிற்சாலையை இயக்குவதற்கு அமைச்சர் தேவானந்தா நடவடிக்கை!
'யாழ் ராணி' சேவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தி - சிறப்பு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
|
|
குண்டு வெடிப்புக்கள் கண்டனத்திற்குரியவை : மக்கள் பாதுகாப்பாகவும் விழிப்புனர்வுடனும் இருக்க வேண்டும் ...
டக்ளஸ் எம்.பி தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ம...
கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி - அமைச்சர் டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்ப...