மக்களின் எதிர்பார்ப்புக்களை மையப்படுத்தியதாகவே யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் அமையும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு
Thursday, March 2nd, 2023கிடைக்கின்ற சந்தர்ப்பங்களையும் அதிகாரங்களையும் பயன்படுத்தி எமது மக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் நிறைற்றி வைக்க வேண்டும் என்பதே தன்னுடைய தொடர்ச்சியான சிந்தனையாகவும் செயற்பாடாகவும் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழவின் செயற்பாடுகளும் மக்களின் எதிர்பார்ப்புக்களை மையப்படுத்தியதாகவே அமையும் என்று தெரிவித்தார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தின் ஆரம்ப உரையாற்றுகையிலேயே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்டத்தினை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான முன்னாய்த்த கூட்டம் இன்று நடைபெற்றமை குறிபிடத்தக்கது
Related posts:
|
|