மக்களது எதிர்காலத்திற்காக எனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பிரயோகிப்பேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, November 24th, 2018

நீங்கள் நம்பிக்கையான எதிர்காலத்தை வாழ்வதற்கும் நீங்கள் வாழும் பிரதேசத்தை வளம் மிகுந்ததாக மாற்றியமைப்பதற்கும் எனக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பிரயோகிப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி இரத்தினபுரம் சிவசித்தி விநாயகர் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் அப்பகுதி மக்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்;

இங்கு வாழும் மக்கள் வாழ்வாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல்வேறு தேவைப்பாடுகளுடனேயே வாழ்ந்து வருகின்றீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

எனக்கு ஒரு விநாடி கிடைத்தாலும் அதை மக்களுக்கானதாகவே எப்போதும் பயன்படுத்துவதுண்டு. எதிர்காலத்திலும் மக்களுக்கான எமது பணிகள் அவ்வாறே அமையும். மக்கள் தமக்கான நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டுமானால் எமக்கான அரசியல் பலத்தைத் தருவதனூடாகவே அது சாத்தியமாகும் என்பதுடன் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு கண்டு ஒளிமயமான வாழ்வை வாழமுடியும்.

அந்தவகையில் உங்ளது வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் நீங்கள் எமக்கு அரசியல் பலத்தை தருவதனூடாகவே அது சாத்தியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

12

1

3
2

4

5

6

8

9

10

Related posts:

கூட்டமைப்பினருக்குத் தகுந்த பாடம் புகட்டுவோம் - டக்ளஸ் தேவானந்தாவிடம் உடையார்கட்டு மக்கள் சுட்டிக்கா...
இரணைத்தீவு மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  - நாடாளுமன்றில்...
இரணைமடு நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு- அமைச்சர் டக்ளஸ் த...

தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதை நான் ஒருபோதும் விரும்பியது கிடையாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
கிளி. பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் வினைத்திறனான எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில...
கச்சதீவில் இலங்கை - இந்தியக் கடற்றொழிலாளர்கள் நல்லெண்ணச் சந்திப்பு - அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் ...