பேலியகொட மீன் சந்தையின் இடையூறுகளை களைவதற்கு நடவடிக்கை – அமைச்சர்களான டக்ளஸ் – ஜோன்ஸ்ரன் நேரடிக் கள ஆய்வு!

Tuesday, October 13th, 2020

பேலியகொட மீன் சந்தைக்கு புதிதாக மேலுமொரு நுழைவாயிலை அமைப்பது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனான்டோ ஆகியோர் இன்று(13.10.2020) கள விஜயத்தினை மேற்கொண்டு ஆராய்ந்த நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் மத்திய மீன் சந்தையான பேலியகொட மீன் சந்தைக்கு தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சில மணித்தியாலங்களுக்குள் வந்து செல்கின்ற நிலையில் வாகனப் போக்குவரத்து நெருக்கடி சந்தையின் செயற்பாடுகளுக்கு பாரிய இடையூறாக காணப்படுகின்றது.

இந்நிலையில் மீன் சந்தையின் நுழைவாயில் அமைந்துள்ள பகுதியிலேயே புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற மரக்கறிச் சந்தையான மெனிக் சந்தையின் நுழைவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், குறித்த நுழைவாயில் அமைந்துள்ள பகுதியில் பாரிய வாகன நெரிசல் எற்பட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்கு பாரிய இடையூறை ஏற்படுத்தும் என்று மீன் சந்தை நிர்வாகிகளினால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன்> கொழும்பு – நீர்கொழும்பு வீதியை கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையுடன் இணைக்கும் பிரதான வீதியில் இன்னுமொரு வாயிலை அமைத்து, வாகன போக்குவரத்து நெரிசலினால் ஏற்படும் இடையூறுகளை களைந்து தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கிடைத்த சந்தர்ப்பங்கள்அனைத்தையும் மக்களது விடியலுக்கானதாக உருவாக்கி வெற்றிகண்டிருக்கின்றோம் - முல்லை...
அதிகாரிகளுக்கு பிரச்சினைகள் இருப்பின் என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுமே தவிர, ஆரம்பிக்கப்பட்ட வேலைத் த...
திரும்பத் திரும்ப கூறுவதால் பொய் உண்மையாகிவிடாது - விழிப்பாக இருக்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்...

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை: நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு  டக்ளஸ் தேவான...
கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்ப தேவர் ஆலய மகரஜோதி பெருவிழாவின் சிறப்பு பூசை வழிபாடுகளில் அமைச்சர் டக...
'சுகந் இன்ரனாசினல்' நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து...