உதிர்க்கின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் சத்தியமானவை: மன்னாரில் அமைச்சர் தேவா வாக்குறுதி!

Friday, July 10th, 2020

சொல்லுகின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் அரசியல் நோக்கங் கொண்ட கருத்துக்கள் இல்லை எனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னால் தெரிவிக்கப்படுகின்ற ஒவ்வொரு கருத்துக்களும் சத்தியமானவை எனவும் தன்னுடைய ஆழ்மனதின் விருப்பங்களும் தெரிவித்தார்.

மன்னார், சிலாவத்துறை சவேரியர்புரம் பிரசேத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும், ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கால போராளிகளில் ஒருவர் என்ற வகையில், போராட்டம் ஏற்படுத்திய அழிவுகளுக்கு தார்மீக பொறுப்பை ஏற்றுக்
கொண்டு, அந்த அழிவுகளுக்கு பரிகாரம் காண்பதற்காகவே அரசியலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்து, ஈ.பி.டி.பி. கட்சியின் கரங்களை வலுப்படுத்துவார்களாயின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் ஒருசில வருடங்களுக்குள் தீர்த்து வைப்பதற்கான பொறிமுறை தன்னிடம் இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வாக்குப்பலத்தை கொண்டு வளமான எதிர்காலத்தை உருவாக்குங்கள் - உடையார்கட்டில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
அரச வேலை வாய்ப்பு பெற்றுக் கொண்ட ஊர்காவற்துறை பிரதேச இளைஞர் யுவதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு...
வாய்ப்புகள் எப்போதும் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது - கிடைக்கும் சூழலை எமக்கானதாக பயன்படுத்திகொள...

இனங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க தவறியமையே நாட்டில் அசம்பாவிதங்கள் தொடர காரணம் – நாடாளும...
எங்கள் ஒளிவிளக்கு டக்ளஸ் தேவானந்தா !யாழில் அலுவலகத்தை திறந்துவைத்து முஸ்லிம்கள் புகழாரம்!
திலீபனை நினைவு கூறும் விடயத்தை தூக்கிப் பிடிப்பது மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்கு அபகரிப்பிற்காகவே ...