பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Sunday, November 24th, 2019

பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலைய கட்டடத் தொகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நிரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்துகொண்டார்.  

இன்று (24) காலை குறித்த விற்பனை நிலையத்திற்கு சென்ற அமைச்சர் குறித்த விற்பனை நிலையத்தில் காணப்பம் குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பில் விற்பனை நிலையத்தின் கடை உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் அமைச்சரிடம் விளக்கமளித்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோடாபய ராஜபக்ச மற்றும் கௌரவ பிரதமர் மகிந்த ராஜபக்ச அகியோருடன் கலந்துரையாடி மேற்படி மீன் விற்பனை நிலையத்தின் தேவைகளை ஒரு மாத காலத்துள் படிப்படியாகப் பூர்த்தி செய்து தருவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நலன்புரி முகாம்களை மூடுவதால் மட்டும் மீள்குடியேற்றம் முடிந்துவிட்டதாகக் கருத முடியாது! - டக்ளஸ் தே...
கைவேலி ஸ்ரீமுறுகண்டிப் பிள்ளையார் ஆலயத்தின் கருவறைக்கான அடிக்கல்லை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ...
கிளிநொச்சி மாவட்டதில் ஒரு இலட்சம் காணித் துண்டுகள் திட்டத்திற்காக கோரப்பட்ட காணிகள் தொடர்பில் அமைச்ச...