பேரம் பேசும் அதிகாரம் எமக்கு கிடைக்குமானால் பிரச்சினைகளுக்கு தீர்வும் எட்டப்படும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Saturday, June 30th, 2018
பேரம் பேசும் அரசியல் அதிகாரம் எனக்கு கிடைக்கும் பட்சத்தில் எமது மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தர முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றுறையில் இன்றைய தினம் கட்சி ஆதரவாள்களிற்கு மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
முப்பதாண்டு கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இயல்பு சூழல் ஓரளவு தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும் எமது மக்களின் வாழ்வியலில் போதுமான மாற்றங்கள் ஏற்படவில்லை.
ஆனாலும், கடந்த காலங்களில் எமக்கு கிடைக்கப்பெற்ற வாய்ப்புக்களையும், சந்தர்ப்பங்களையும் உரிய முறையில் நாம் பயன்படுத்தி முடியுமான அபிவிருத்தி உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல விடயங்களையும் முன்னெடுத்திருந்தோம்.
நாம் இந்த ஆட்சியில் தொடர்ந்து இருந்தாலோ அல்லது முன்னைய ஆட்சி தொட்ந்திருந்தாலோ நான் எமது மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை நிச்சயமாக கொண்டுவந்திருப்பேன்.
ஆனால் கிடைக்கப்பெற்ற அதிகளவிலான நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை அதிகாரங்களை பெற்றோர் மக்களின் நலன் சார்ந்து உளைக்காமல் இருக்கின்றமையானது துரதிஸ்ர வசமானதே.
இந்நிலையில் தான் மக்கள் எமக்கு பேரம் பேசும் அரசியல் பலத்தினூடான அதிகாரத்தை தருவார்களே ஆனால் நாம் மக்களின்வாழ்வியல் முன்னேற்றங்களை மட்டுமல்லாது அபிவிருத்திகளையும் நிச்சயம் முன்னெடுக்க முடியும் என்பதையும் திடமாக குறப்பிட விரும்புகிறேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
IMG_20180630_110154
IMG_20180630_110137
IMG_20180630_110123

Related posts:

கிளிநொச்சியில் எரிந்து கருகிக்கிடப்பது எங்கள் முயற்சியும், எங்கள் உழைப்பும்- டக்ளஸ் தேவானந்தா!
ஒரு சமூகத்தின் மாற்றத்தை நிர்ணயிக்கின்ற பொறுப்பு அந்த சமூகத்தில் வாழுகின்ற இளைஞர் சமூகத்தையே சார்ந்த...
நித்திய உறக்கத்தில் ஆழ்ந்தவருக்கு ஆழ்மன அஞ்சலி - ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் இழப்புச் ...

இன விகிதாசாரத்திற்கு ஏற்ப அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் எமது இளைஞர், யுவதிகளுக்கு வேலைய...
தென்னிலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு...
அரசின் தொழில் சட்ட ஏற்பாடுகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெ...