பாரதலக்‌ஷ்மன் பிரேமச்சந்திராவின் உருவச்சிலைக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்ச்செண்டு சார்த்தி மரியாதை!

Saturday, October 8th, 2016

காலஞ்சென்ற பாரதலக்‌ஷ்மன் பிரேமச்சந்திராவின் 5ஆம் ஆண்டு நினைவு நினைவுப்பீடத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்கொத்து வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நினைவுகூரல் நிகழ்வு கொலன்னாவையில் அமைந்துள்ள நினைவுப்பீடத்தில் இன்றையதினம்(8) நடைபெற்றது. குறித்த நிகழ்வில் பிரேமச்சந்திராவின் குடும்ப நண்பரான  டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டு அன்னாரை நினைவுகூர்ந்து சிறப்பித்திருந்தார்.

முன்னதாக உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்ததைத் தொடர்ந்து நினைவுச் சதுக்கத்தில் குடும்ப உறுப்பினர்கள் சகிதம்  டக்ளஸ் தேவானந்தாவும் மலர்ச்செண்டு வைத்து வணக்கம் செலுத்தினார்.

காலஞ்சென்ற பாரதலக்‌ஷ்மன் பிரேமச்சந்திரா நாடாளுமன்ற உறுப்பினர் கிருணிகா பிரேமச்சந்திராவின் தந்தை என்பதுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் நீண்டகால நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது

unnamed (5)

unnamed

unnamed (4)

unnamed (2)

unnamed (1)

unnamed (3)

Related posts: