பாரதப் பிரதமரை இலங்கையின் பிரதமர் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேச்சு!

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பிரதிநிதிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது.
முன்பதாக இந்தியா சென்றுள்ள இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினருக்கு தலைநகர் புதுடில்லியிலள்ள ராஷ்டிரபதிபனில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கையின் பிரதிநிதிகள் நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு நேற்றையதினம் இந்திய தலைநகர் புதுடெல்லி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் மொழிக்கும் சிந்திப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
எமக்கு கிடைத்த சபைகளை வினைத்திறன் மிக்க சபைகளாக வழிநடத்தி செல்வோம் - ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்...
கித்துள் கள்ளினை வீடு வீடாக விற்பனை செய்து வீடுகளை மதுபான சாலைகளாக மாற்றுவதற்கு திட்டங்கள் ஏதும் உண்...
|
|