வடக்கில் கடலுணவு வருமானம் அதிகரிப்பு – வினைத்திறன் மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் நன்றியும் தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022

கடந்த இரண்டு வருங்களில் வடக்கு மாகாணத்தில் மீன், இறால், நண்டு., கடலட்டை வருமானம் அதிகரித்திருக்கின்றது.

இதற்கான வினைத்திறன் மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு  பாராட்டுக்களையும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம் எக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

முன்பதாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களை வலுப்படுத்தும் நோக்குடன் கடற்றொழிலாளர் அமைப்புக்களை புனரமைத்து சீர்ப்படுத்தும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இதன்போதே கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகங்களை சீர்படுத்தி, தேவையான பதிவுகளை மேற்கொண்டு  கடற்றொழிலாளர் நலன்சார் செயற்பாடுகளை வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி பொங்கிட தைப்பொங்கல் திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம்!... பொங்கல் வாழ்த்...
புலம்பெயர் தேச உறவுகள்போல எம் தேச உறவுகளும் வாழும் சூழல் உருவாக வேண்டும் - காக்கைதீவில் டக்ளஸ் தேவான...
அமைச்சு பொறுப்புக்களை சிறப்பாக செயற்படுத்தியவர்கள் நாங்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்கா...

அரச தொழில்வாய்ப்புகளில் - எத்துறைகளாக இருந்தாலும் இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் - மன்றில் டக்ளஸ...
தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் நலனகளில் கூடிய அக்கறை செலுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
மறைந்தும் மறையாத ஒளிச்சுடர் மரிய சேவியர் அடிகளார் - அஞ்சலிக் குறிப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!