சமுர்த்தியின் பெயர் மாற்றப்பட்டால் தமிழில் அதனை ‘மக்கள் செல்வம்’ என்று  அழைக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 18th, 2016

சமுர்த்தி உதவித் திட்டம் தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் முன்வைத்த கருத்துக்கு அமைவாக அதன் பெயரை ‘ஜன ,சுறு’ என மாற்றுவதாயின் அதற்கான தமிழ் பதமான ‘மக்கள் செல்வம்’ என்ற பதத்தையும் அதனுடன் இணைக்க வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்..

அவர் மேலும் தெரிவிக்கையில் –

சமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளை அதிகரிக்கும் நிலையில் முன்னுரிமை அடிப்படையில் யுத்தம் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டு இன்று தங்களது வாழ்வாதாரங்களை முழுமையாக இழந்துள்ள வடக்கு – கிழக்கு மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக  கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு அதி விஷேட முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா மேலும் வலியுறுத்தியுள்ளார்.

01

Related posts:

சமூக ஒடுக்கு முறைகளிலிருந்து மக்களை பாதுகாத்து அவர்களு க்கான உரிமைகளை வென்றெடு த்து கொடுப்பதே எமது ந...
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப எமது  செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெர...
அட்டைத் துப்பாக்கிகளை நிஜத் துப்பாக்கியாக்காதீர்கள் - கொற்றாவத்தையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவருகின்றது கேபிள் டி.வி. உரிமையாளர்களின் அத்துமீறல்கள் – நாடாளுமன்றில் டக்...
நீதி கேட்டு போராடும் துணிச்சலை எமது மக்கள் மனதில் விதைத்தவர்கள் நாங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
அமைச்சர் டக்ளஸின் கௌதாரிமுனை விஜயத்தின் எதிரொலி - பூநகரி கௌதாரிமுனை நாளாந்த பேருந்து சேவை அதிகரிப்பு...