பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 19th, 2016

நாட்டின் விவசாயத்துறையை மேம்படுத்தும் நோக்கில் மேலும் பல திட்டங்களை நாம் வகுத்து செயற்படுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது. அந்த வகையில் நவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்படல் வேண்டும். இதற்கான திட்டங்களை இந்த அரசு முன்னெடுக்கும் என எதிர்பார்ப்பதுடன், எமது விவசாயத் துறைக்கென ஒரு தேசிய பொறிமுறை ஏற்படுத்தப்பட வேண்டியதும் அவசியமாகும் எனவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் தற்போது ஏற்பட்டுவருகின்ற காலமாற்றங்கள் காரணமாக காலபோக அறுவடைகளில் பெரும் பாதிப்பு நிலை ஏற்பட்டு வருகின்றன. எனவே இதற்கு முகம்கொடுக்க அரசு தயாராக இருக்க வேண்டும். இவ்வாறான நிலைகளில் விவசாய மக்களை பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்கு உரிய நிவாரண உதவிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதேவேளை உணவு உற்பத்திப் பற்றாக்குறைகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கு முகம் கொடுக்கவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளர்.

113

Related posts:

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை மின்னிணைப்புகள் வழங்கப்படாதிருப்...
யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபை ஊழியர்கள் தமது எதிர்காலம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்...
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் க...

வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசு அக்கறைகாட்டவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்...
பளை கரந்தாய் பகுதி LRC காணிகளில் வசிக்கும் மக்களின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் கரிசனை!
யாழ்ப்பாணம் வருகைதந்தார் ஜனாதிபதி ரணில் - சிறப்பு வரவேற்பளித்து வரவேற்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...