நெல்லுக்கான சந்தை வாய்ப்பு பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ்!

Friday, May 7th, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் கணிசமானளவு நெல் உற்பத்தி செய்யப்படுகின்ற போதிலும் அவற்றை காயவிட்டு பதனிடுவதில் காணப்படுகின்ற குறைபாடுகளினால் சரியான சந்தை வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அந்தவகையில், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மாவட்டத்தில் பல்வேறு பாகங்களில்  சுமார் பத்து நெல் காய வைக்கும் நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற துறைசார் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடலின்போது மேற்கண்டவாறு தெரிவித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழவின் இணைத் தலைவர், விவசாய நடவடிக்கைகளுக்கு செயற்கை பசளைகளை பயன் படுத்த எமது விவசாயிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Related posts: