நெடுந்தீவில் இந்தியன் முருங்கைச்செடி செய்கையை ஊக்குவிக்க உடன் நடவடிக்கை – நெடுந்தீவு விவசாயிகளிடம் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Monday, July 27th, 2020

நெடுந்தீவு பிரதேச விவசாயிகளை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதுடன் பொருளாதாரத்தையும் அதிகரிப்பதற்காக   இந்தியன் முருங்கை செடி செய்கையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை  மேற்கொண்டுதரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

நேற்றையதினம் நெடுந்தீவு பகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டு சென்றிருந்த  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பிரதேசத்தின் விவசாயிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த விவசாயிகள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றிருந்தனர்.

அத்துடன் தமது பிரதேசத்திற்கு ஏற்ற விவவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏதுநிலைகளை பெற்றுத்தருமாறும் அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்திரந்தனர்.

இதன்போதே குறித்த பயிற்செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுதருவதாக தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விவசாயிகளுக்கு இலகுகடன் வசதியையும் விரைவில் கிடைப்பதற்கு நடவடிக்கை செய்து தருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்கள் செலுத்துகின்ற வரித் தொகையானது அரசின் கடன்களையே செலுத்தப் போதாத நிலையில் மக்களின் தேவைகளைப் பூ...
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட ஏற்பாடுகள் மூலம் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் - நாடாளுமன...
அச்சுவேலி உளவிக்குளம் பிள்ளையார் கோயில் பாலத்திற்கு அடிக்கல் நாட்டி கட்டுமாண பணிகளை ஆரம்பித்து வைத்...

தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்துவதோடு எமது மக்களின் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமைக்காக நாம் தொடர...
தேசமெங்கும் நிரந்தர ஒளிவீச தீபச்சுடர்கள் ஏற்றுவோம்! - தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா...
சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் - பொலிஸாரின் சாக்குப் போக்குகளை தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க மு...