நெடுந்தீவில் இந்தியன் முருங்கைச்செடி செய்கையை ஊக்குவிக்க உடன் நடவடிக்கை – நெடுந்தீவு விவசாயிகளிடம் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Monday, July 27th, 2020

நெடுந்தீவு பிரதேச விவசாயிகளை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதுடன் பொருளாதாரத்தையும் அதிகரிப்பதற்காக   இந்தியன் முருங்கை செடி செய்கையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை  மேற்கொண்டுதரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

நேற்றையதினம் நெடுந்தீவு பகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டு சென்றிருந்த  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பிரதேசத்தின் விவசாயிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த விவசாயிகள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றிருந்தனர்.

அத்துடன் தமது பிரதேசத்திற்கு ஏற்ற விவவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏதுநிலைகளை பெற்றுத்தருமாறும் அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்திரந்தனர்.

இதன்போதே குறித்த பயிற்செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுதருவதாக தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விவசாயிகளுக்கு இலகுகடன் வசதியையும் விரைவில் கிடைப்பதற்கு நடவடிக்கை செய்து தருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அச்சுறுத்திவரும் சட்டவிரோத கடல் தொழில் துறை நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் - டக்ளஸ் ...
வன்முறைகளை யாரும் கையிலெடுக்க கூடாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ் - உண்மையை கண்டறியுமாறும் பொலிஸாரிடம் ...
சட்டத்தரணிகள் அறிவுசார்ந்து சிந்திக்க தவறின் முயற்சி வெற்றியளிக்காது - சுட்டிக்காட்டும் ஈ.பி.டி.பி.!

யார் துரோகிகள் என்பதை தமிழ் மக்கள் இன்று புரிந்துகொண்டுள்ளார்கள் – நல்லூரில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்...
நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் - எமது மக்கள் சார்ந்த நல்ல விடயங்களுக்காக ஜனாதிபதிக்கு தேவையான ஒத்...
மக்களுக்கு கௌரவமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கம் -  செயலாளர் நாயகம் டக்ளஸ்!