நீர்ப்பாசன வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர்களான சமால் ராஜகன்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ்ப்பாணத்தில் விஷேட ஆய்வு!

Wednesday, July 22nd, 2020

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த நீர்ப்பாசண மற்றும் விவசாய அமைச்சர சமல் ராஜபக்ஷ மற்றும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்ட மீளாய்வுக் கூட்டம் சரசாலையில் அமைந்துள்ள யாழ் குடாநாட்டிற்கான குடிநீர்வழங்கல் திட்ட பணிப்பாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதனிடையே வடமாராட்சி உப்பாறு பிரதேசத்தில் மழை நீரை சேமித்து யாழ். குடாநாட்டிற்கான குடிநீரை வழங்கும் பாரிய திட்டம் விவசாயம் மற்றும நீர்பாசணத் துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் முன்னிலையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

சுமார் ஒன்றரை வருடங்களில் குறித்த திட்டத்தினூடாக மக்கள் பலனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்களை சரியான வழியில் செயற்பட வைப்பதே எனது நோக்கம் – அதையே மணிவண்ணன...
சட்டவிரோதத் தொழில் முறைகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் யாழ் மாவட்ட ...
'ஈ.பி.டி.பி.யின் புதுக்குடியிருப்பு இளைஞர் அணி' உருவாக்கம் - நிர்வாகக் கட்டமைப்பும் செயலாளர் நாயகம் ...