நிதி ஏற்பாடுகள் சீரானால் எந்நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, March 19th, 2023

நிதி ஏற்பாடுகள் சீரானால் எந்நேரத்திலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றது.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த கலந்துரையாடல் இன்று முற்பகல் இடம்பெற்றது.

இதன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவது பற்றி ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தோடர்பில் அவர் மேலும் கூறுகையில்

குரல் –

இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தின் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

டக்ளஸ் தேவானந்தாவின் சேவைகள் மீண்டும் தொடரவேண்டும் - சான்றோர் சனசமூக நிலைய பிரதிநிதிகள் கோரிக்கை
மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் - யாழ். மாவட்டசமாச சம்மேளனப் பிரதிநிதிகள் டக்ளஸ் த...
நாட்டில் தெரு நாய்களைவிட குறைந்த நிலைக்கு புத்தாக்க முயற்சிகள் தள்ளப்பட்டுள்ளன – நாடாளுமன்றில் டக்ளஸ...