நாவாந்துறை பிறீமயர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 3rd, 2023

நாவாந்துறை பிறீமயர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாவாந்துறை சென் நிக்ளஸ் விளையாட்டு அரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள மென் பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில்  ஏழு அணிகள் கலந்து கொண்டுள்ள நிலையில், முதலாவது போட்டியை சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பிரதி போலிஸ் மா அதிபர் மஞ்சுளா சேனரத்னா மற்றும் யாழ் பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி சம்பிளி பலிகென உட்பட  பலர் கலந்து சிறப்பித்தனர். – 03.06.2023

000

Related posts: