திருக்கோணேஸ்வரத்தின் மஹா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
Saturday, February 25th, 2017
வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருகோணமலை திருக்கோணேவரர் ஆலயத்தின் மாஹா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள டக்ளஸ் தேவானந்தா பிரத்தியேகமாக மஹா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் பங்கெடுத்திருந்தார்
ஆறு கால ஜாமப் பூசைகள் நடைபெறும் சிறப்பு நாள் வழிபாடுகளில் பங்கேற்ற அதேவேளை கோயிலின் பிரதம் சிவாச்சாரியார்களின் ஆசியையும் பெற்நுக்கொண்டார்.
திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தா மாஹா சிவாராத்திரியன்று ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளிலும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
யாழ் மாவட்டத்தைப் போன்று முல்லை மாவட்டத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பி தாருங்கள் – டக்ளஸ் தேவா...
உள்ளூர் உற்பத்தி நிலைகளை வலுப்படுத்துவதன் ஊடக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் - அமைச்சர் டக்...
SLIC நிறுவனத்தினால் நீண்ட நாள் பழுதடையாத செமன் பக்கற் அறிமுகம் !
|
|
|


